பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு நடிகை விந்தியா இரங்கல் செய்தி

பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு நடிகை விந்தியா இரங்கல் செய்தி

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா" என்ற சங்கமம் பட வெற்றி பாடலின் மூலம் என் வாழ்க்கைக்கு உயிர் தந்த  எஸ். ஜானகி அம்மா நம்மை விட்டு சென்றதை நம்ப முடியவில்லை.. குரலில் மட்டுமின்றி குணத்திலும் குழந்தை போன்ற அந்த இசைக் குயிலின் குரல் என்னைப் போன்ற எத்தனையோ நடிகைகளை நட்சத்திரமாக உயர்த்தி இருக்கிறது.. சரியாக நடக்க கூட தெரியாத என்னை நடனமாடவைத்தது ஜானகி அம்மாவின் அந்த காந்தக்குரல்மட்டுமே. அந்த சரீரம் வேண்டுமானால் மறையலாம், ஆனால் ஜானகி அம்மாவின் சாரீரம் சாகா வரம் பெற்றது. அது மறையவே மறையாது... சென்று வாருங்கள் அம்மா,, கடவுளின் காதுகளையும் கொஞ்சம் சந்தோஷப்படுத்த சென்று வாருங்கள் அம்மா..

நடிகை விந்தியா.