சென்னை பிரசாத் லேபில் 65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய கொடிகளை வழங்கி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
நம் நாட்டின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை பிரசாத் லேபில் , 65 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர்
R.S கார்த்திக் @ கார்த்திகேயன் வாயிலாக 'லேபர்' பட இயக்குனர் சத்தியபதியும் , நாயகர் முத்துவும் ., ஜனநாயகத்தின் வலுவான தூண்களான பத்திரிகையாளர்கள் மற்றும் இணையதள செயதியாளர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் திரளாக . கலந்துகொண்டு, தேசப்பற்றுடன் தேசிய கொடி பெற்றுச்சென்று தங்கள் இல்லங்களில் ஏற்றி மகிழ்ந்திட்ட சினிமா பத்திரிகையாளர்கள்,மக்கள் தொடர்பாளர்கள், திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள்... உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் 'சினிமா பத்திரிகையாளர் சங்கம் & 'லேபர்' படக்குழுவினர் சார்பாக நன்றி! நன்றி !!