பாய்ஸ் படத்திற்கு பிறகு எனக்கு பெரியதாக எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

பாய்ஸ் படத்திற்கு பிறகு எனக்கு பெரியதாக எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
பாய்ஸ் படத்திற்கு பிறகு எனக்கு பெரியதாக எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு உருவான படம் தான் பாய்ஸ். இந்த படத்தில் நடிகர் சித்தார்த், நகுல், ஜெனிலியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் ஐந்து நண்பர்களில் ஒருவராக நடித்தவர்தான் மணிகண்டன். இந்நிலையில் நடிகர் மணிகண்டன் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய தற்போதைய நிலை குறித்தும், வாழ்க்கை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

பாய்ஸ் படத்திற்கு பிறகு எனக்கு பெரியதாக எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைப்பற்றி நினைத்து நான் கவலைப்படவும் இல்லை. பாய்ஸ் படத்தில் நடித்ததும் எல்லாம் தானாக வந்துவிடும் என்று நான் கொஞ்சம் திமிராக இருந்துட்டேன். ஆனால், நான் இப்ப படத்துக்காக அலையும் போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் காதல், தென்மேற்கு பருவக்காற்று, சூது கவ்வும் போன்று நிறைய படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து. ஏதோ சூழ்நிலை காரணமாக கை விட்டுப்போச்சு.

நல்ல வேலையாக நான் ' தென்மேற்கு பருவக்காற்று 'படத்தில் நடிக்கவில்லை. இல்லை என்றால் விஜய் சேதுபதி போன்ற ஒரு அற்புதமான நடிகர் கிடைத்து இருக்க மாட்டார். நான் படம் கிடைக்கலைன்னும், சம்பாதிக்க முடியலைனும் என்று கவலைப்பட்டதில்லை. நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன். நாங்கள் வீடு வாடகைக்கு விட்டிருக்கும் அதில் வரும் வருமானத்தை வைத்து எங்க லைஃப போகுது. என்று கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியுடன், மணிகண்டன் பேசியது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, நான் மணிகண்டன் பேசிய பேட்டியை பார்த்தேன் அந்த பேட்டி மிகவும் கூலாக இருந்தது அந்தப் பேட்டியின் டிரெய்லரை பார்த்த போது அவர் ஏதோ கஷ்டப்படுகிறார் என்பது போலத்தான் இருந்தது. நான் கூட ஐயோ ஏதோ கஷ்டப்படுகிறார் போல என்றுதான் நினைத்தேன்.

ஆனால், பேட்டியை பார்த்த போது அவர் மிகவும் கூலாக கண்ணாடி எல்லாம் போட்டுக்கொண்டு மிகவும் ஜாலியாக தான் இருந்தார். அவரது பேட்டியை பார்ப்பது நன்றாக இருந்தது. எனக்குத்தெரிந்து மணிகண்டன் மீண்டும் பிஸியாகி விடுவார் என்பதை நான் நம்புகிறேன். இப்போ பார்ப்பதற்கே ஆள் நன்றாக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்காக நானே போட்டோ அனுப்பி இருக்கிறேன் என்று கூறி உள்ளார் விஜய் சேதுபதி .