திரைத்துறை தொழிலாளர்களின் நலனுக்காக மீண்டும் நடிக்க வாருங்கள்" – அஜித்குமாருக்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்

திரைத்துறை தொழிலாளர்களின் நலனுக்காக மீண்டும் நடிக்க வாருங்கள்" – அஜித்குமாருக்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்

"திரைத்துறை தொழிலாளர்களின் நலனுக்காக மீண்டும் நடிக்க வாருங்கள்" – அஜித்குமாருக்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்

சென்னை:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரை மீண்டும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். திரைத்துறையை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்களை உலகம் முழுவதும் அடையாளம் கண்டது சினிமா. கோடிக்கணக்கான ரசிகர்களை உங்களுக்கு உருவாக்கிக் கொடுத்ததும் சினிமாதான். தற்போது நீங்கள் உயிரைப் பணயம் வைக்கும் கார் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறீர்கள். ஆனால், திரைத்துறையை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "நடிகர் விஜய் தற்போது முதலமைச்சராகியுள்ள நிலையில், ரசிகர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், திரைத்துறைக்கும் புத்துயிர் அளிக்கும் வகையில் முன்னணி தயாரிப்பாளர்கள் இணைந்து திரைப்படங்களை தயாரிக்க, அதில் நீங்கள் நடிக்க வர வேண்டும். உயர்ந்த லட்சியத்திற்காக மீண்டும் திரைத்துறையில் முழுமையாக செயல்படுமாறு இரு கரம் கூப்பி அழைக்கிறேன்" என்றும் மன்சூர் அலிகான் தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

மன்சூர் அலிகானின் இந்த வேண்டுகோள் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலக வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.