சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது
கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது.
கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் அவர்களையும் சமீபத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
*சிறப்பு விருந்தினர்களாக*
திரு. பூச்சி முருகன் அவர்கள் தலைவர், குடிசை மாற்று வாரியம் மற்றும் துணைத் தலைவர், நடிகர் சங்கம்;
திரு. பிரபாகர ராஜா அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்,
விருகம்பாக்கம்;
டத்தோ. நடிகர் திரு. ராதாரவி அவர்கள்
தலைவர், தென்னிந்திய சின்னத்திரை மற்றும் திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கம்;
இயக்குநர் திரு. பேரரசு அவர்கள்,
செயலாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்;
திரு. காரம்பாக்கம் கணபதி அவர்கள்,
மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்;
திரு. R.K. செல்வமணி அவர்கள்
தலைவர், FEFSI;
நடிகர் திரு. S.Ve. சேகர் அவர்கள்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்;
திரு. மங்கை அரிராஜன் அவர்கள்
சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர்;
டாக்டர். திரு. ஜாக்குவார் தங்கம் அவர்கள்,
தலைவர், கில்டு தயாரிப்பாளர் சங்கம்;
திருமதி. சுஜாதா விஜயகுமார் அவர்கள்,
தலைவர், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்;
திரு.M.E.சேகர் MC அவர்கள்,
சென்னை பெருநகர மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்;
திரு. லியாகத் அலிகான் அவர்கள்,
செயளாலர், தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்;
திரு. உதயசங்கர் அவர்கள்,
தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்;
திருமதி. ரத்னா லோகேஸ்வரன் MC அவர்கள், சென்னை பெருநகர மாநகராட்சி கல்விக் குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்.
*சிறப்பு அழைப்பாளர்களாக*
திரு. A.C. சண்முகம் அவர்கள்,
நிறுவனர், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம், மதுரவாயல்;
திரு. தமிழ்செல்வன் அவர்கள்,
நிறுவனர், சேலம் ஆர் ஆர் பிரியாணி;
திரு. ACS. அருண்குமார் அவர்கள், தலைவர், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம், மதுரவாயல்;
ஆன்மிக சொற்பொழிவாளர் முருகன் அருள் திரு. ஜெயம் SK கோபி அவர்கள்
நடிகர், தயாரிப்பாளர்;
திரு. மங்கை அரிராஜன் அவர்கள், தலைவர்,
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்;
திரு. கோபி பீம்சிங் அவர்கள்,
செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்;
திரு. அறந்தாங்கி சங்கர் அவர்கள், பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்;
திரு.ராஜா வெங்கையா அவர்கள்,
தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;
திரு. ரமேஷ் அவர்கள், செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;
திரு. மூர்த்தி அவர்கள்,
பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;
திரு. தாமஸ் கென்னடி அவர்கள்,
தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம்;
திரு. பெருமாள் நெர் அவர்கள்,
செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம்;
திரு. தர்மலிங்கம் அவர்கள்,
பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம்;
திரு. கஜபதி அவர்கள்,
தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;
திரு. சுரேஷ் அவர்கள்,
செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;
திரு. நரசி சுதர்சன் அவர்கள்,
பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;
திரு. சரவணன் அவர்கள்
நிறுவனர், ஒ.எஸ்.ஈவன்ட்ஸ்;
நடிகர் மேட்டூர். திரு. தணிகாசலம் அவர்கள்;
திரு. பாலசுப்ரமணி அவர்கள், நிறுவனர். பி.எஸ்.ராக்ஸ் கிரியேஷன்ஸ்;
திரு.ராப்ஸ் பிரசாத் அவர்கள், நடிகர், நிர்வாக தயாரிப்பாளர்;
திரு. நல்லதம்பி அவர்கள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***