"சந்திரமுகி" இரண்டாம் பாகம் இந்தியில் தயாராகிறது

"சந்திரமுகி" இரண்டாம் பாகம் இந்தியில் தயாராகிறது

2007ம், ஆண்டில் வெளியான படம் "பூல் புலையா", மலையாளத்தில் "மணிசித்திரதாழ்" என்ற பெயரிலும், தமிழில் சந்திரமுகி என்று வெளியான இந்தி படம் தான் "பூல் புலையா", இது மிகப்பெரிய வெற்றிப்படமாகவும்,வசூலில் சாதனை படைத்த படமாகவும் அமைந்தது, இப்படத்தில் அக்ஷய் குமார், அமிஷா படேல், வித்யா பாலன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், "பூல் புலையா" 2-ஆம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது பர்ஹத் சாப்ஜி என்பவர் இதற்கான கதையை தயார் செய்ததோடு, தயாரிப்பாளர் பூஷண் குமாரை சந்தித்து தயார் செய்த கதையை சொன்னார், அவருக்கும் அந்த கதை பிடித்து விடவே "பூல் புலையா" 2-ஆம் பாகம் எடுக்க ஏற்பாடு செய்து வருகிறார். முதல் பாகத்தில் இயக்கிய மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷன் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார், ஆனால் முதல் பாகத்தில் நடித்த அக்ஷய் குமார், அமிஷா படேல், வித்யா பாலன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை.