படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுகொடுத்த நடிகை சாய் பல்லவி

படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுகொடுத்த நடிகை சாய் பல்லவி

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி, இவர் தமிழில் கரு, தனுஷ் நடிப்பில் வெளியான மாரி - 2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார், இந்நிலையில் "எங்கேயும் எப்போதும்" புகழ் ஷர்வானத் நடிப்பில் உருவான ‘படி படி லேச்சு மனசு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், சமீபத்தில் வெளியான இந்த படம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

ரூ.22 கோடிக்கு வியாபாரமாகி ரூ.8 கோடி மட்டுமே இந்த படம் வசூல் செய்தாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. 

இந்த படத்துக்கு சாய்பல்லவிக்கு பேசிய சம்பளத்தில் ஒரு தொகையை படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் முன்பணமாக கொடுத்து இருந்தார், மீதி தொகை ரூ.40 லட்சத்தை படம் ரிலீசான பிறகு தருவதாக சாய் பல்லவியிடம் தயாரிப்பாளர் வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது ரூ.40 லட்சத்தை கொடுக்க அவர் முன்வந்தபோது சாய்பல்லவி வாங்க மறுத்துவிட்டார். படம் நஷ்டமடைந்ததால் ரூ.40 லட்சத்தையும் அவர் விட்டுக்கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.