மறக்க முடியாத மாபெரும் உதவி

மறக்க முடியாத மாபெரும் உதவி

அறுபது ஆண்டு பாரம்பரியமிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தை வழி நடத்திச் செல்லும் சினிமா பத்திரிகையாளர்களாகிய எங்களின் இந்த இக்கட்டான (கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவில் தவித்துக் கொண்டிருக்கும்) இவ்வேளையில் பிரபல நடிகர் அஜித் அவர்கள் எங்களின் நிலமையை புரிந்து கொண்டு எங்களின் "சினிமா பத்திரிகையாளர் சங்க''த்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயினை கொடுத்து உதவினார். இதற்கு நாங்கள் அனைவரும் என்றென்டும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம். திரு.அஜித் அவர்கள் காலத்தினால் செய்த இந்த உதவியினை எப்படிப்பாராட்டினாலும் தகும் .அதே போல் நடிகர் அஜித் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். மேலும் சினிமா பத்திரிக்கை தொடர்பாளர் யூனியனுக்கும் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் .சத்தமில்லாமல் இவர் செய்த இந்த மாபெரும் உதவியினை நினைத்து உலகமே வியந்து பாராட்டுகிறது .மீண்டும் திரு .அஜித் அவர்களுக்கு ஒட்டு மொத்த சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் .