3 மொழிகளில் வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

3 மொழிகளில் வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
3 மொழிகளில் வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

3 மொழிகளில் வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் கைவசம் 10 படங்கள் உள்ளன. இதில் சேசிங் படம் முடிந்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக வருகிறார். கே.வீரக்குமார் இயக்கி உள்ளார். தஷி இசையமைத்துள்ளார். போலீசை பெருமைப்படுத்தும் பாடல் படத்தில் உள்ளது. வரலட்சுமியின் அதிரடி சண்டை காட்சிகள் உள்ளன. அவற்றில் டூப் போடாமல் நடித்து இருக்கிறார். படத்தில் மூன்று வில்லன்கள் உள்ளனர். மலேசியாவில் கடலுக்கு நடுவில் இருக்கும் ஒரு தீவில் பதுங்கி இருக்கும் முக்கிய வில்லனை பிடிக்க வரலட்சுமி, பாலசரவணன், யமுனா ஆகியோர் மலாக்காவில் கடலில் ஒரு படகில் துரத்தி செல்வதுபோன்று காட்சியை படமாக்கினர். படகு நடுகடலில் சென்றபோது முன்னால் உட்கார்ந்து இருந்தவர்கள் பின்னால் வந்ததால் திடீரென்று கவிழ்ந்தது. அதை பார்த்து படக்குழுவினர் அலறினார்கள். படகோட்டியின் சாதுரியத்தால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பி உள்ளனர். சேசிங் படத்துக்கு தணிக்கை குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது.