ஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து  நடத்திய ஆன்லைன் நடனம் கவனத்தை ஈர்க்கிறது !

ஓணம் முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து  நடத்திய ஆன்லைன் நடனம் கவனத்தை ஈர்க்கிறது !

உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம் , இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங்குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது . ஆகவே ஆவணி மாதத்தில் அத்தம் நாளில் தொடங்கி பத்து நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  ஓண நடனம் , புலிக்களி எனும் புலி விளையாட்டு , படகு போட்டி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளால் பண்டிகை களை கட்டும் . ஆனால் கொரோணா காலத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதால் கொண்டாட்டங்களுக்கு அது தடையாக உள்ளது . இந்நிலையில் கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியையையும் நடன ஆசிரியையுமான  அம்பிகா பாலசுப்ரமணியமும் அவரது மகள் , கத்தரில் வசிக்கும் அமிர்தாவும் சேர்ந்து தங்களது நூபுரா நடன பள்ளி சார்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள 31 பெண்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஓண நடனம் செய்ய வைத்து அதை யூ டியூபில் வெளியிட்டனர் . இந்த ஆன்லைன் ஓண நடனம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பிற கலைஞ்சர்களும் இதை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர் என்பது இவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது . இது குறித்து அம்பிகா பாலசுப்ரமணியம்

" கோயம்பத்தூர் முதல் வெளிநாடுகளின் வசிக்கும் எங்கள் நட்பு வட்டங்களையும் என்னிடம் நடனம் கற்கும் மாணவிகளையும் ஆன்லைன் மூலமாக  அழைத்து இந்த நடனத்தை செய்துள்ளோம் .இதில் குழந்தைகள் ,குமரிகள்,குடும்ப தலைவிகள் , பாட்டிமார்கள் என 31 மகளீர் பங்கேற்றனர் . இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முறையாயாக நடனம் கற்காதவர்களே . உலகெங்கும் பரவி இருக்கும் இவர்கள் ஜாதி மத சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அன்பாலும் பாசத்தாலும் நடனத்தோடு உள்ள பற்றினாலும் இணைந்தவர்கள் . தொழில் நுட்ப ரீதியாக குறைகள் இருக்கலாம் . ஆனால் புலம் பெயர்ந்து வாழும்  எங்களது முயற்சி மற்ற கலைஞ்சர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம் ." இவ்வாறு கூறினார் .

VIDEO LINK:

https://youtu.be/6-4MwvDpBlU