புதுயுகம் தொலைக்காட்சியில் அனுஷத்தின் அனுகிரஹம் நிகழ்ச்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் அனுஷத்தின் அனுகிரஹம் நிகழ்ச்சி

கடந்த நூற்றாண்டில் நம்மை அதிகம் வியக்க வைத்த மகான் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவர் என்றால் அது மிகையாகாது. அவர் வாய்மொழி அனைத்தும் அழிக்க முடியாத செல்வம். அவரைப் பற்றி அறியாத தகவல்கள் ஆயிரம் உண்டு. அப்படிப்பட்ட தகவல்களை நமக்காக எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் ஆராய்ந்து, அனுஷத்தின் அனுக்கிரஹம் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார்.

நேயர்களின் ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மக்களோடு இந்நிகழ்ச்சியை சொற்பொழிவாகவும் வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6:50 மணிக்கும் மாலை 6:50 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.மேலும் இந்நிகழ்ச்சியில் கர்நாடக பாடகர் டாக்ட ர்.கணேஷ் பக்தர்கள் சார்பாக கேட்கும் கேள்விகளுக்கு திரு. இந்திரா சௌந்தர்ராஜன் பதிலளிக்கிறார் .