தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில், தனது 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுறார்

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில், தனது 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுறார்

முனுசாமி என்று இயற்பெயர் கொண்ட காமெடி கிங் செந்தில், தற்போது வரை 280க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவர் இராமநாதபுரம், முதுகுளத்தூர் என்ற ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் ராமமூர்த்தி - திருக்கம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இதில் நடிகர் செந்தில் மூன்றாவதாக பிறந்தார். சின்ன வயதில் தன் அப்பா திட்டிப்புட்டார் காரணத்தால் தன்னுடைய 12-ஆம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார்.

இதன் பிறகு என்ன செய்வதறியாமல் தவித்த இவர் முதலில் எண்ணெய் ஆட்டும் நிலையத்திலும், பிறகு ஒரு டாஸ்மாக் கடையிலும் ஒட்டிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். 

அப்போது உடனிருந்த ஃபிரண்ட்ஸூகளின் ஊக்கத்தால் ஒரு நாடகத்தில் இணைந்து தன்னுடைய நடிப்பு திறமையை வளர்த்து கொண்டார். இதுவே அவருக்கு சினிமா துறையில் அடியெடுத்து வைக்க உதவியாக இருந்தது.

திரைத்துறையில் முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் 1983-இல் வெளியான 'மலையூர் மம்பட்டியான்' படத்தின் மூலம் திரைத்துறையினரை கவர்ந்தார். 

இதனை அடுத்து 14-ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு சென்ற இவரை பெற்றோர்கள் இன்பமுகத்துடன் வரவேற்பு தந்தனர். பின்னர் இவருக்கு 1984-ஆம் ஆண்டில் கலைச்செல்வி என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது.

இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என இருமகன்கள் உள்ளனர்.