சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்த 'ஆச்சி மசாலா !'

சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்த 'ஆச்சி மசாலா !'
சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்த 'ஆச்சி மசாலா !'

கொரோனா கட்டுப்பாடுகளால் சினிமா மற்றும் ஊடகத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிறுவனம் சாராத சினிமா பத்திரிகையாளர்களும், புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள், மூத்த சினிமா பத்திரிகையாளர்கள்... என ஏராளமானவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த கொரோனா கட்டுப்பாடுகள் மூலம் எதிர்பாரத வாழ்வாதார சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கும் சினிமா பத்திரிகையாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலர், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம்' மூலம் பொருட்களாகவும், பணமாகவும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் ., 'ஆச்சி மசாலா' நிறுவனம் தங்களது நிறுவன தயாரிப்பான அத்தியாவசிய .பொருட்கள் நிரம்பிய தொகுப்பு பைகளை கொரோனா நிவாரணமாக சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு வழங்க முன் வந்து முதற்கட்டமாக 50 ஆச்சி மசாலா தொகுப்பு பைகளை சினிமா பத்திரிகையாளர் சங்கத்தலைவர் D.R.பாலேஷ்வரிடமும், பொருளாளர் மதிஒளிகுமாரிடமும் வழங்கியுள்ளதுடன் எஞ்சியுள்ள 150 உறுப்பினர்களுக்கும் , 'ஆச்சி மசாலா' தொகுப்பு பைகளை வழங்க அடுத்தடுத்தடுத்த கட்டங்களில் முயற்சிப்பதாகவும் கூறி உள்ளது.

சினிமா பத்திரிகையாளர்களுக்கு 'ஆச்சி மசாலா' வழங்கியுள்ள இந்த கொரோனா நிவாரண சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு பைகளுக்காகவும் , மேலும் வழங்க இருக்கும் நிவாரண பொருட்களுக்காகவும், 'ஆச்சி மசாலா' நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் மற்றும் நிர்வாகிகளுக்கு., குறிப்பாக 'வைஸ் பிரசிடென்ட்' சிவக்குமார் உள்ளிட்டவர்களுக்கு ஓட்டுமொத்த சினிமா பத்திரிகையாளர்கள் சார்பாக 'சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம்' நன்றி தெரிவித்து கொள்கிறது.

மேலும், ஆச்சி மசாலா நிறுவனம் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு தனது நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களை நன்கொடையாக வழங்கியிருப்பது போன்றே 200 பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாக கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு, பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, 'அபிராமி' திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன் , பெப்ஸி அமைப்பு சார்பாக அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி, விஜய் ஆண்டனி நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'தமிழரசன்' படத்தயாரிப்பாளரும் முன்னாள் பெப்ஸி செயலாளருமான சிவா, நடிகர்கள் அஜித்குமார், கார்த்தி சிவக்குமார் , சிவகார்த்திகேயன், 'கட்டில் 'படநடிகரும் இயக்குநருமான கணேஷ் பாபு, நடிகையும் சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் 'அக்சஸ் பிலிம் பேக்டரி' ஜி.டில்லி பாபு, இயக்குநரும் தயாரிப்பாளருமான சினிஷ், நடிகை பார்வதி நாயர், தயாரிப்பாளரும் பைனான்சியருமான சந்திரபிரகாஷ் ஜெயின், விநியோகஸ்தர்கள் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், படூர் ரமேஷ், அருள்பதி, இசையமைப்பாளர் சத்யா , சண்டை பயிற்சியாளர் சில்வா ... நுங்கம்பாக்கம் வாலஸ் கார்டன் பகுதியில் உள்ள கேஃப் லேட் ( kafe Latte ) ஆகியோர் பொருளாகவும், நிதியாகவும் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். 

இவர்களில் யார் யார் என்ன பொருட்கள் வழங்கியிருக்கிறார்கள், அதன் மதிப்பு என்ன, மற்றும் பணமாக வழங்கியவர்களில், யார் யார், எவ்வளவு தொகை வழங்கியிருக்கிறார்கள், என்பதை ஏற்கனவே 'சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம்' சார்பில் செய்தியாக வெளியிடப்பட்டு, அந்த செய்தி பல இணையதள ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது என்பதும் தாங்கள் அறிந்ததே!

உதவிய உள்ளங்களுக்கும் மேலும் உதவ இருக்கும் உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை தன் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது 65 ஆண்டு பாரம்பரியம் கொண்ட 'சினிமா பத்திரிகையாளர் சங்கம் !'